Sunday, February 26, 2017

ஏறு தழுவுதல் எம் இனத்தின் உரிமைஎன் தந்தையின் கவிதை வரிகள்

வந்தேறிகள் அறிவரோ எங்கள் சிறப்புகளை ?
காளைக்கு வதையென்பர் கணக்கில்லாத் துயரமென்பர்
தாயின் அரவணைப்பும் காலனின் பாசப்பிடிப்பும்
ஒன்றெனக் கொள்வர்-அவ் வுணர்விலா அறிவிலிகள் !
ஆநிரை கவர்தலும் அதனை மீட்டலும்
தமிழனின் தனிச்சிறப்பு தரணிக்கோ பெருவியப்பு
எங்களது சிறப்புகளை துடைத்தழிக்க நீநினைத்தால்
திணவெடுத்த காளைகளும் மறங்கொண்ட மங்கையரும்
சதங்கண்ட தாயவளும் களம்வந்து முன்னிற்பர்
புறங்கொண்டு ஓடிடுவாய் உதைபட்டு மிதிபட்டு !

No comments: