Sunday, February 26, 2017

ஏறு தழுவுதல் எம் இனத்தின் உரிமைஎன் தந்தையின் கவிதை வரிகள்

வந்தேறிகள் அறிவரோ எங்கள் சிறப்புகளை ?
காளைக்கு வதையென்பர் கணக்கில்லாத் துயரமென்பர்
தாயின் அரவணைப்பும் காலனின் பாசப்பிடிப்பும்
ஒன்றெனக் கொள்வர்-அவ் வுணர்விலா அறிவிலிகள் !
ஆநிரை கவர்தலும் அதனை மீட்டலும்
தமிழனின் தனிச்சிறப்பு தரணிக்கோ பெருவியப்பு
எங்களது சிறப்புகளை துடைத்தழிக்க நீநினைத்தால்
திணவெடுத்த காளைகளும் மறங்கொண்ட மங்கையரும்
சதங்கண்ட தாயவளும் களம்வந்து முன்னிற்பர்
புறங்கொண்டு ஓடிடுவாய் உதைபட்டு மிதிபட்டு !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சவுதிஅரேபியாவிலிருந்து தமிழ் நண்பர்கள்












இளைஞனே பருவ நெருப்பில் காய்ச்சிய வாளே!


இளைஞனே
பருவ நெருப்பில்

காய்ச்சிய வாளே!
நாளை என்பது
உன் திருநாளே
நினைவிருக்கட்டும்
உன்
புருவ நெருப்பில்
பூகம்பங்கள்
இமையைத் திறந்தால்
சூர்யோதயங்கள்
நீ கொட்டி முழங்கினால்
உலகமே செவிடு
எட்டி உதைத்தால்
திசைகளும் தவிடு
இது உன் பலம்
அசுர பலம்
உன் பலவீனங்கள்
என் விழி ஈரங்கள்
நீ
தலை நிமிர்ந்து நடந்தால்
நீல வானம் குடைபிடிக்கும்
தாழ்ந்து இழிந்து குனிந்தால்
கைக்குட்டையும் எட்டாத
வானமாகும்
வா
நீ வெல்ல
விண்வெளி காத்திருக்கிறது
நீ பந்தாட
கிரகங்கள் காத்திருக்கின்றன
புழுதிகளையும்
பிரளயமாக்க
விழி திற!
வெற்றி உனக்குமுன்
கொடியெடுத்துப் போகிறது
வருக இளைஞனே! வருக