Wednesday, February 20, 2019

ஏன் பாசிச கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க க் கூடாது ?


1. கெயில், மீத்தேன், ஹைடிரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், சேலம் 8 வழிச்சாலை என மக்கள்நல விரோத திட்டங்கள் .
2. பண மதிப்பிழப்பு தோல்வி, ஜி.எஸ்.டி குளறுபடி, நடுத்தர, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டு தொழில் முடக்கம்
3. அந்நிய முதலீட்டாளர்களுக்கும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் சிவப்புக்கம்பள வரவேற்பு. 
3. ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓட்டுக்கள் கிடைக்காது.
4. முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் தலித் வெறுப்பு அரசியல்.
5. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு.
6. சுவிஸ் வங்கியிலிருந்து இன்னும் கறுப்புப்பணம் மீட்கப்படாதது மற்றும் அவர்களது பெயர்கள் இன்னும் வெளியிடப்படாதது.
7. விஜய் மல்லையா, நீரவ் மோடி என வங்கிக்கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது.
8. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ போன்றவர்களின் தனிஅதிகாரத்தில் தலையிட்டு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படவிடாமல் தடுப்பது.
9. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட்டு கவர்னர்கள் மூலம் குழப்பம் விளைவிப்பது.
10. கட்சியினரின் திமிர் பிடித்த எதேச்சதிகாரமான பேச்சுக்கள்.
11. தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே பிரிவினயைத் தூண்டுவது, சாதி மத  வெறுப்புணர்வை வளர்ப்பது.
 12. தேசத்தந்தையைக் கொன்ற தேசவிரோத சக்திகளான கோட்ஸே, சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்துத்துவவாதிகளை சிலை வைத்து வழிபடுவது.
13. உளவுத்துறை எச்சரித்தும் பாதுகாப்பில் கோட்டைவிட்டு 350 கிலோ வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது மோதி 45 ராணுவ வீரர்களை இறப்புக்கு காரணமாக இருந்தது.
14. தேசமக்கள் வறுமைவில் வாட விளம்பரத்திற்கு மட்டும் 3 ஆயிரம் கோடி செலவு.
15. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் நடுத்தெருவில் அம்மணமாக போராட விட்டது.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Thursday, February 7, 2019

தமிழின் பெருமை

தமிழில் ஒரு பொருளுக்கு இத்தனை சொற்கள் இருக்கின்றதென்பதை இப்பாடல் விளக்கும் திறன் வியக்கச் செய்கிறது. எழுதியவர் கவி வீர ராகவ முதலியார்
“இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்
யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்
நற்களியாமென்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ”
அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள்.
புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்
புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.
இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.
அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.
புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.
இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்
அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.
யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.
புலவர்கள் எக்காலத்திலும் பொருளுள்ளவராய் வாழ்ந்ததில்லையாம். கிடைக்கும் பெரும் பரிசில்களை எல்லோருக்கும் ஈந்து விட்டு அடுத்த வேளை உணவுக்கு எதிரபார்ப்பவராய் இருப்பர் என்ற குறிப்பையும் முதலிரு வரிகளுக்கிடையே தருவது தெரிகிறதல்லவா?