Wednesday, February 20, 2019

ஏன் பாசிச கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க க் கூடாது ?


1. கெயில், மீத்தேன், ஹைடிரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், சேலம் 8 வழிச்சாலை என மக்கள்நல விரோத திட்டங்கள் .
2. பண மதிப்பிழப்பு தோல்வி, ஜி.எஸ்.டி குளறுபடி, நடுத்தர, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டு தொழில் முடக்கம்
3. அந்நிய முதலீட்டாளர்களுக்கும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் சிவப்புக்கம்பள வரவேற்பு. 
3. ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓட்டுக்கள் கிடைக்காது.
4. முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் தலித் வெறுப்பு அரசியல்.
5. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு.
6. சுவிஸ் வங்கியிலிருந்து இன்னும் கறுப்புப்பணம் மீட்கப்படாதது மற்றும் அவர்களது பெயர்கள் இன்னும் வெளியிடப்படாதது.
7. விஜய் மல்லையா, நீரவ் மோடி என வங்கிக்கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது.
8. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ போன்றவர்களின் தனிஅதிகாரத்தில் தலையிட்டு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படவிடாமல் தடுப்பது.
9. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட்டு கவர்னர்கள் மூலம் குழப்பம் விளைவிப்பது.
10. கட்சியினரின் திமிர் பிடித்த எதேச்சதிகாரமான பேச்சுக்கள்.
11. தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே பிரிவினயைத் தூண்டுவது, சாதி மத  வெறுப்புணர்வை வளர்ப்பது.
 12. தேசத்தந்தையைக் கொன்ற தேசவிரோத சக்திகளான கோட்ஸே, சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்துத்துவவாதிகளை சிலை வைத்து வழிபடுவது.
13. உளவுத்துறை எச்சரித்தும் பாதுகாப்பில் கோட்டைவிட்டு 350 கிலோ வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது மோதி 45 ராணுவ வீரர்களை இறப்புக்கு காரணமாக இருந்தது.
14. தேசமக்கள் வறுமைவில் வாட விளம்பரத்திற்கு மட்டும் 3 ஆயிரம் கோடி செலவு.
15. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் நடுத்தெருவில் அம்மணமாக போராட விட்டது.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

No comments: