Friday, February 24, 2017

சங்கத்தமிழ் கவிதைப் பூங்காவிற்காக நான் எழுதிய கவிதை


தலைப்பு: தூண்டிலுக்கு தப்பிய மீன்கள்

விழித்துக்கொண்டே தூங்குகின்றோம் விடியாத இரவை எண்ணி
ஏங்கி ஏங்கி அழுகின்றோம் ஏன் இப்படி நடந்ததென்று
அன்றில் பறவைகளாய் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்த நாங்கள்
இன்று நொந்துபோய் தனிமையை விரக்தியை ஏந்துகின்றோம்
மீண்டும் வராதா மீண்டு வராதா அந்த அழகிய பொற்காலம்
நடந்ததெல்லாம் கனவாய் பழங்கதையாய் மண்மூடிப் போனதுவே !
உண்மை தோற்பதில்லை தர்மம் என்றும் அழிவதில்லை என்று
சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டோமே அத்தனையும் பொய்யா
கடவுளுக்கு கண் இல்லையா காலனைக் காலால் உதைக்க
முள் குத்தினால் கூட மூச்சடைத்து விடுவாளே என் அம்மா
இன்று முள்ளிவாய்க்காலில் மொத்தமாய் மூடி விட்டார்களே !
உயிரோடிருந்தும் இன்று நடை பிணங்களாய் வாழ்ந்து
கொண்டிருக்கும் நாங்கள் தூண்டிலுக்கு தப்பிய மீன்கள் !

No comments: