Thursday, March 10, 2011

சந்தோசமாக குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வாழ கடைபிடிக்க வேண்டியவை

* நானே பெரியவன்,  நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

* எந்த விஷயத்தையும், பிரச்சனையும் கையாளுங்கள் 

* சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று  உணருங்கள்

* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

* குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

* அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்
   உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

* கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

* உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம்  தளர்த்திக்கொள்ளுங்கள்

* மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக  புரிந்து கொள்ளாதீர்கள்

* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட   நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

* பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,
   தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

* பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும்
  என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.


இது நான் எழுதியது இல்லை, யாரோ சொன்னது, எனக்குப் பிடித்திருந்ததால்   இதை இங்கே பதிவேற்றியிருகிறேன்.  முயன்று தான் பார்ப்போமே !
- அன்புடன் நண்பன் குரு

No comments: