Thursday, May 3, 2018

வருமானமும் செலவும் குறித்து தெய்வப் புலவர் வள்ளுவரும், தமிழ் மூதாட்டி அவ்வையும் கூறியது


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"
தன் வருமானமறிந்து, சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, நிறைய இருப்பது போல் காட்சி தந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு அதிகமாக இல்லையென்றால் அவர் வாழ்வில் கெடுதி இல்லை.
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு"
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்.

No comments: